சுசி கடந்த முப்பது ஆண்டுகளாக தன்னை ஆன்மிகவாதி என்று கூறிக் கொள்கிறார். ஆன்மிகம் என்று கூறிக்கொண்டு - புத்தகங்கள் வாங்குவது, பயிற்சிக் கட்டணம் செலுத்துவது என்று பணம் செலவு செய்கிறார்; பயிற்சி செய்வது, படிப்பது என்று தனிமையில் நேரம் செலவு செய்கிறார்.
இந்த ஆன்மிகம் என்பது என்ன என்று ஒரு {இரண்டு மதிப்பெண்} கேள்வி கேட்டால் ... நீண்ட நேரம் மௌனமாகிறார்...
(சிந்திக்கிறார்)
[கேட்பவரின் முதிர்ச்சி, புரிதலுக்கு ஏற்ற பதில் தேடுகிறார்]
{இந்தக் கேள்விக்கான சரியான பதில்கூட முப்பது ஆண்டுகளாக கிடைக்கவில்லை }
[இது என்ன இரண்டு மதிப்பெண் கேள்வியா? 15 மதிப்பெண் இல்லை, நூறு மதிப்பெண் கூட போதாது, பெரிய புத்தகமே எழுதலாம்]
{ஏற்கனவே நிறைய புத்தகங்கள் வந்தாச்சு ... 15 மதிப்பெண் பதிலே கொஞ்சம் கஷ்டம் தான், தூக்கம் வரும் ... }
"எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன்தானும்"
ஆன்மிகம் என்பது ...
சாதிக்க முடியாதவர்கள் தேடிக் கொள்ளும் சுலபமான அடையாளம் என்றார்,
யாரோ சிலர் பணமும், பலமும் சம்பாதிக்க சாமானியர்கள் கொள்ளும் மூடநம்பிக்கை என்றார்,
தன்னம்பிக்கை இல்லாதோர் தேடும் மனத்தாங்கி என்றார்,
மனநிலை என்றார்,
ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றார்,
உடல்நிலை என்றார்,
சக்தி ஏற்றும் முறை என்றார்,
நினைத்ததை நடக்க வைக்கும் வழி என்றார்,
உயிர்நிலை என்றார்,
விஞ்ஞானிகளுக்கு இன்னமும் எட்டாத மெய்ஞானம் என்றார்,
மதத்தைக் கடந்த மனவளர்ச்சி என்றார்,
படைத்தவனோடு ஏற்படும் நேரடித் தனித்தொடர்பு என்றார்,
மனதை அடக்கும் வழி என்றார்,
படைத்தவனுக்கு செய்யும் கடமை என்றார்,
படைத்தவன் கருணையை, புகழைப் பரப்புவது என்றார்,
அனைத்து உயிரினங்களுக்கும் தான் செய்யும் சேவை என்றார்,
அனைத்து உயிரினங்களுக்கும் தான் காட்டும் நன்றி என்றார்,
அடைய வேண்டிய இறைநிலை என்றார்
இழந்து விட்ட இயற்கை நிலை என்றார்,
மனதைக் கடக்கும் வழி என்றார்,
வாழ்க்கை செல்ல வேண்டிய பாதை என்றார்,
அனைத்தையும் தள்ளுவது என்றார்,
காலத்தைக் கடப்பது என்றார்,
வாழ்க்கை செல்லும் பாதை என்றார்,
வாழ்க்கை என்றார்,
பாதை என்றார்,
பயணம் என்றார்,
அனைத்தையும் ஏற்பது என்றார்,
இந்தக் கணத்தில் வாழ்வது என்றார்,
கால ஓட்டத்தோடு செல்வது என்றார்,
{இப்படித்தான் வருடத்திற்கு இரண்டு,மூன்று புது அர்த்தம் சொல்லுறார், எல்லாம் கடந்த காலமாக இருக்கே ... இப்போ என்னதான் சொல்றாரு?}
<இந்தக் கணத்தை முழுமையாக ஏற்று இந்தக் கணத்தில் இருக்கும் வாழ்க்கைப் பயணம்>
(நம்மைப் போன்ற சாமானியர்கள் இதற்கு முயற்சி செய்யணும், அமையாவிட்டால் சரியான பயிற்சி செய்யணும், பக்குவம் வரும்போது அமையும்)
[இதனால் என்ன பயன்? இதுக்கு செலவு செய்த பணத்திற்கும், நேரத்திற்கும்? எதாவது லாபம் இருக்கணுமே, அது என்ன?]
<வாழ்வை ஏற்க முடியாத ஒவ்வாமையால் வரும் பிரச்னைகள் வராது, பிறகு ...>
{இப்போ இது போதும்... தூக்கம் வருது... இன்னொரு நாள் பார்ப்போம்}
"மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே."
இந்த ஆன்மிகம் என்பது என்ன என்று ஒரு {இரண்டு மதிப்பெண்} கேள்வி கேட்டால் ... நீண்ட நேரம் மௌனமாகிறார்...
(சிந்திக்கிறார்)
[கேட்பவரின் முதிர்ச்சி, புரிதலுக்கு ஏற்ற பதில் தேடுகிறார்]
{இந்தக் கேள்விக்கான சரியான பதில்கூட முப்பது ஆண்டுகளாக கிடைக்கவில்லை }
[இது என்ன இரண்டு மதிப்பெண் கேள்வியா? 15 மதிப்பெண் இல்லை, நூறு மதிப்பெண் கூட போதாது, பெரிய புத்தகமே எழுதலாம்]
{ஏற்கனவே நிறைய புத்தகங்கள் வந்தாச்சு ... 15 மதிப்பெண் பதிலே கொஞ்சம் கஷ்டம் தான், தூக்கம் வரும் ... }
"எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன்தானும்"
ஆன்மிகம் என்பது ...
சாதிக்க முடியாதவர்கள் தேடிக் கொள்ளும் சுலபமான அடையாளம் என்றார்,
யாரோ சிலர் பணமும், பலமும் சம்பாதிக்க சாமானியர்கள் கொள்ளும் மூடநம்பிக்கை என்றார்,
தன்னம்பிக்கை இல்லாதோர் தேடும் மனத்தாங்கி என்றார்,
மனநிலை என்றார்,
ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றார்,
உடல்நிலை என்றார்,
சக்தி ஏற்றும் முறை என்றார்,
நினைத்ததை நடக்க வைக்கும் வழி என்றார்,
உயிர்நிலை என்றார்,
விஞ்ஞானிகளுக்கு இன்னமும் எட்டாத மெய்ஞானம் என்றார்,
மதத்தைக் கடந்த மனவளர்ச்சி என்றார்,
படைத்தவனோடு ஏற்படும் நேரடித் தனித்தொடர்பு என்றார்,
மனதை அடக்கும் வழி என்றார்,
படைத்தவனுக்கு செய்யும் கடமை என்றார்,
படைத்தவன் கருணையை, புகழைப் பரப்புவது என்றார்,
அனைத்து உயிரினங்களுக்கும் தான் செய்யும் சேவை என்றார்,
அனைத்து உயிரினங்களுக்கும் தான் காட்டும் நன்றி என்றார்,
அடைய வேண்டிய இறைநிலை என்றார்
இழந்து விட்ட இயற்கை நிலை என்றார்,
மனதைக் கடக்கும் வழி என்றார்,
வாழ்க்கை செல்ல வேண்டிய பாதை என்றார்,
அனைத்தையும் தள்ளுவது என்றார்,
காலத்தைக் கடப்பது என்றார்,
வாழ்க்கை செல்லும் பாதை என்றார்,
வாழ்க்கை என்றார்,
பாதை என்றார்,
பயணம் என்றார்,
அனைத்தையும் ஏற்பது என்றார்,
இந்தக் கணத்தில் வாழ்வது என்றார்,
கால ஓட்டத்தோடு செல்வது என்றார்,
{இப்படித்தான் வருடத்திற்கு இரண்டு,மூன்று புது அர்த்தம் சொல்லுறார், எல்லாம் கடந்த காலமாக இருக்கே ... இப்போ என்னதான் சொல்றாரு?}
<இந்தக் கணத்தை முழுமையாக ஏற்று இந்தக் கணத்தில் இருக்கும் வாழ்க்கைப் பயணம்>
(நம்மைப் போன்ற சாமானியர்கள் இதற்கு முயற்சி செய்யணும், அமையாவிட்டால் சரியான பயிற்சி செய்யணும், பக்குவம் வரும்போது அமையும்)
[இதனால் என்ன பயன்? இதுக்கு செலவு செய்த பணத்திற்கும், நேரத்திற்கும்? எதாவது லாபம் இருக்கணுமே, அது என்ன?]
<வாழ்வை ஏற்க முடியாத ஒவ்வாமையால் வரும் பிரச்னைகள் வராது, பிறகு ...>
{இப்போ இது போதும்... தூக்கம் வருது... இன்னொரு நாள் பார்ப்போம்}
"மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே."
No comments:
Post a Comment