Tuesday, July 17, 2012

காப்பு





நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்


நெஞ்சமாகிய கனத்த, வலிய கல் நெகிழ்ந்து உருகும்படியாக,
தஞ்சம் என்று அடைக்கலம் அடைந்தவர்களுக்கு அருள் புரியும் ஆறுமுகனுக்கு,
சிறப்பான இலக்கணம் சேர்ந்த செம்மையான தமிழ்ச் சொற்கள் கொண்டு புனையும் இந்த மாலை சிறந்திடவே
ஐந்து கைகளைக் கொண்ட யானைமுகனின் பாதங்களை பணிகிறேன்

நெஞ்சம் உருகுதல் என்பது மிக ஆழ்ந்த அனுபவங்களின் பொது மட்டுமே நிகழும். ஆறுமுகனிடம் தஞ்சமடைந்து அவனருள் பெறும்போது நெஞ்சம் உருகுது.
 -

No comments:

Post a Comment