Wednesday, July 18, 2012

பாடல் ௮


அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

எனது ஊர், எனது உறவினர், நண்பர், எனது வீடு என்று குறுகிய வட்டங்களுக்குள் (மயங்கி இருந்த )
என் மயக்கம் கெடுமாறு (விலகுமாறு)  மெய்ப்பொருளை எனக்கு சொன்னவன்
குமாரன், மலையரசனின் மகளான பார்வதியின் மகன்
போரில் எதிர்த்த அசுரர்களை கொன்றவன்

அமரும் - விரும்பும், தங்கியிருக்கும்
 பதி -  ஊர்
கேள் - உறவு, நட்பு
அகம் - இடம், வீடு, நிலம், உடல்
பிமரம் - பிரமம் என்பது எதுகைக்காக பிமரம் ஆனது
பிரமம் - மயக்கம், கலக்கம்
கிரிராசன் - மலையரசன்
சமரம் - போர்
பொருத - எதிர்த்த
தானவர் - அசுரர்

சமரம் பொரு தானவ நாசகனே ...
பொதுவாக தேவர்கள், அசுரர்கள் வேறு உலகங்களில் வாழ்வதாக நம்பப்பட்டாலும், அனுபவத்தால் அறிந்த ஆன்மிகவாதிகள் தேவரும், அசுரரும் தன்னுள் இருப்பதை ஏற்பர். அசுரர்கள் தோன்றுவதும், தேவர்களோடு போரிடுவதும் தொடர்ந்து நடக்கும் செயலாகும். தேவர்கள் மற்றும் அசுரர்களை விட உயர்ந்த ஒரு சக்தியை கொண்டே அசுரர்களை அழிக்க முடியும். அந்த சக்தியும் நம்முள்ளே இருக்கிறது, வெளியில் வேறு உலகில் இருந்து வரவழைக்க தேவையில்லை.




No comments:

Post a Comment