Wednesday, July 18, 2012

பாடல் ௧௧


கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா 
நாகாசல வேலவ நாலுகவித் 
தியாகா சுரலோக சிகாமணியே

கூ, கா, என்றெல்லாம் ஒலியெழுப்பி என் உறவினர் கூடி ஒப்பாரி வைத்து அழும்படியாக
 இந்த உடலை விட்டு பிரிந்து போகாதவகையில் எனக்கு மெய்ப்பொருளை கூறியவனே,
திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் வேலாயுதனே, நால்வகை  கவிகளையும்
பாடும் ஆற்றலை தருபவனே, தேவலோக வாசிகள் தங்கள் தலையால் வணங்கும் சிகாமணியே

நாகாசலம் - திருச்செங்கோடு - ஆதிசேடனாகிய நாகராஜனால் பூசிக்கப்பட்ட இடம்.
நாலுகவி - நால்வகை  கவிகள் - ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி
சிகாமணி - முடிமணி - தலையில் அணியும் மணி

கிளை கூடியழ போகாவகை
அர்த்தம் 1
உறவினர் கூடி அழும் மரணமில்லாத சாகாநிலை அடைந்ததை குறிக்கிறது
அர்த்தம் 2
ஞானியர்களின் மறைவின்போது, மற்ற சாமானிய மனிதர்களின் மரணத்தைப்போல உறவினர் கூடி ஒப்பாரி வைத்து அழுவதில்லை. ஞானநிலை அடைந்ததை குறிக்கிறது.

No comments:

Post a Comment