Wednesday, July 18, 2012

பாடல் ௩


வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனை ஆண்டஇடம்
தானோ பொருளாவது சன்முகனே

அர்த்தம் ௧
ஐம்பூதங்களில் ஒன்றா? ஞானம் உதிக்கும் இடமா? நான்கு வேதங்களா? நானா? மனமா? என்னை ஆட்கொண்ட இடமா?  இந்த ஆறில் எதையும்  மெய்ப்பொருள் என்று கொள்ள முடியவில்லையே.  மெய்ப்பொருள் என்பது எது ஆறுமுகனே?

அர்த்தம் ௨
ஐம்பூதங்களில் ஒன்றா? ஞானம் உதிக்கும் இடமா? நான்கு வேதங்களா? நானா? மனமா?  இந்த ஐந்தில் எதையும்  மெய்ப்பொருள் என்று கொள்ள முடியவில்லையே. என்னை ஆண்ட இடம்தானே மெய்ப்பொருள் சண்முகனே?
'எனை ஆண்ட இடம்' என்று குறிப்பது ஆண்டவனை என்றும், முதல் ஐந்து கேள்விகளில் இல்லாதவண்ணம்  'தானே' என்று அழுத்தம் கொடுத்து கேட்பதால்ஆண்டவன் தான் மெய்ப்பொருள் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.

வான் = ஆகாயம்
புனல் = நீர்
பார் = மண்
கனல் = நெருப்பு
மாருதம் = காற்று 

No comments:

Post a Comment