Wednesday, July 18, 2012

பாடல் ௧௬


பேரா சைஎனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ 
வீரா முதுசூர் படவே லெறியுஞ் 
சூரா சுர லோ கதுரந் தரனே

பேராசை என்கிற நோயில் கட்டுண்டு துன்பப்பட்டும்
ஆராயாது வினைகள் சேர்க்கும் நான், மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வது முறையா?
வீரா, பழமையான சூரனாகிய மாயை அழியும்படி ஞான வேல் எறியும்
சூரனே, தேவலோகத்தை பாதுகாக்கும் பொறுப்பேற்றவனே

பிணி - நோய், கட்டு, துன்பம், பின்னல், விருப்பம்
ஓர்தல் - ஆராய்ச்சி, தெளிதல், நினைத்தல், அறிதல், தெரிந்தெடுத்தல்
துரந்தரன்  - பொறுப்பு ஏற்பவன் 

No comments:

Post a Comment