Wednesday, July 18, 2012

பாடல் ௧௭


யாமோ தியகல் வியுமெம் மறிவுந்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே னடவீர் நடவீ ரினியே

நாம் படித்த கல்வியையும் நம் அறிவையும்
நாம் பெறுவதற்காக ஞானத்தை வேலாக ஏந்தி நிற்கும் குரு தந்ததால்
உலகின் மேல் உள்ள மயக்கம் அடியோடு தெளிந்து அற, மெய்யுடன் கலப்பவர்களே

இதில் கடைசி வரிக்கு பல விளக்கங்கள் தரலாம், அவரவர்க்கு ஏற்புடையது அவரவர்க்கு சரியான விளக்கம்.


விளக்கம் 1

நாவினால் அவனையும், அவனையடையும் வழியையும் மற்றவருக்கு சொல்லி, பாடி நடந்து காட்டுங்கள். (நன்றிகடனாக அவன் புகழ் பாடல்)

விளக்கம் 2
கந்தனை எப்போதும் நாவில் நடக்கும்படி செய்வீர், அதாவது அவன் பெயரை சதா சொல்வது. (நாம ஜபம் செய்தல்)


விளக்கம் 3
நாக்கிற்கு மேலே இருக்கும் ஏழாம் சக்கரத்தில் சென்று இனி இருங்கள். (ஞான நிலையில் நிலைத்தல்)

No comments:

Post a Comment