Wednesday, July 18, 2012

பாடல் ௰


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரிதலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே

கருமை நிறமுடைய எருமை மீது யமன் வரும்போது தோகையால்
அழகு பெற்ற வாகனமாகிய மயில் மீது ஏறி என் எதிரே வருவாய்
மாலையணிந்த மார்பனே, இந்திரனின் தலத்தை அழித்தவனாகிய
சூரனாகிய மாமரம் மடியும்படி வேலினை ஏவியவனே

காலன் - எமன் - காலம் முடியும் நேரம் வந்து உயிரை எடுப்பவன், மரணத்தை தருபவன்
கலபம் - கலாபம் - தோகை
ஏர் - அழகு
வலாரி - வலன் என்ற அரக்கனை கொன்ற இந்திரன்
வலாரிதலாரி - வலாரியின் தலத்தை அழித்தவன்; இந்திரலோகத்தை அழித்தவன்

மரணபயத்தை நீக்க, பிரணவத்தை வாகனமாகவும், ஞானத்தை ஆயுதமாகவும்  கொண்ட, கந்தனை  வேண்டும் பாடல்.

No comments:

Post a Comment