Wednesday, July 18, 2012

பாடல் ௧௩


முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே

விளக்கம் 1
முருகன், ஞானத்தை (வேல்) ஆயுதமாக கொண்ட முனிவன், அவனை நம் அஞ்ஞானத்தை போக்கக்கூடிய குரு என்பதை, அவனை வேண்டி அவன் அருள் பெறாது அறியாமல் இருப்பவர்கள், அவனை (கடவுளை) அறியும் தரம் எப்படி இருக்குமென்றால் ...
உருவம் அன்று, அருவம் அன்று, உள்ளது அன்று, இல்லாதது அன்று
இருள் அன்று, ஒளி அன்று எனும்படி இருப்பதே இறைவன் (என்று அறிய முடியாது இருப்பார்)

இந்த விளக்கமே எனக்கு ஏற்புடையது, இதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வர்.

விளக்கம் 2
முருகன், ஞானத்தை (வேல்) ஆயுதமாக கொண்ட முனிவன், அவனை நம் அஞ்ஞானத்தை போக்கக்கூடிய குரு என்று அறிவது ,  (அவன் இயல்பை அறிவது,)
(அவன் அருள் கொண்டுதான் அறியமுடியும்) அவன் அருள் கொண்டு அறியாதவர்கள் அறிய முடியாதது (அவன்,  அது)
உருவம் அன்று, அருவம் அன்று, உள்ளது அன்று, இல்லாதது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று, எனும்படி (இருமைகளை கடந்து) நிற்பது.

முனி - தவத்தோன், இறைமை

No comments:

Post a Comment