Wednesday, July 18, 2012

பாடல் ௬


திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்புமதோ
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே

இறுகிய கல்லுருவம் போன்ற என் மனதில் உனது திருவடியான
அழகு நிரம்பிய தாமரை மலருமா?
எனக்கு வேலை கொடு என்று வள்ளியின் பாதம் பணியும்
என்றும் குறையாத மோகம் போன்ற கருணை உடையவனே

அணி - அழகு
ஆர் - நிறைந்த
அரவிந்தம் - தாமரை

பணியாவென வள்ளிபதம் பணிதல் ...
விளக்கம் 1
வள்ளி என்பது இச்சாசக்தியைக் குறிப்பது. இச்சாசக்தியின் விருப்பங்களை மிகுதியான விருப்பத்துடன் நிறைவேற்றி  வைக்கும் கருணாமூர்த்தி.
விளக்கம் 2
வள்ளி என்பது ஆன்மாவைக்குறிப்பது, கந்தன் பரமாத்மா, ஆன்மாக்களின் தேவைகளை விருப்பத்துடன் பூர்த்தி செய்யும் கருணாமூர்த்தி.

கல்போன்று இறுகிய இடத்தில் தாமரை வளர்ந்து மலர்வதில்லை, இளகிய சேற்றிலேதான் வளர்ந்து மலரும். அதுபோல இறுகிய மனதில் கந்தனின் திருவடி படுவதில்லை.


No comments:

Post a Comment