Wednesday, July 18, 2012

பாடல் ௯


மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே

மணம்வீசும் தேன் துளிக்கும்  மலர்களை அணிந்து பிறர் கவனத்தை ஈர்த்து மயக்கும்  பொதுமகளிரின் வலையில்
விழுந்து இங்கும் அங்கும் அலையும் இயல்பை என்று விடுவேன்
தடைகளை அறுத்து செல்லும்படியாக வேலாயுதத்தை மலையான அசுரன் மீது எறியும்
(அசுரர்க்கு ) கொடுமையாக தயவு தாட்சண்யம் காட்டாதவனே, துன்பம் அற்றவனே, பயம் இல்லாதவனே

மட்டு - தேன், மணம்
மையல் - மயக்கம்
பரிசு - இயல்பு
தட்டு - தடை
சயிலம் - மலை
நிட்டூரம் - கொடுமை, தயவு தாட்சண்யம் இல்லாமை
ஆகுலம் - துன்பம், வருத்தம், கலக்கம், மாறுபாடு
நிராகுலம் - ஆகுலம் அற்றது
நிர்ப்பயன் - பயமற்றவன்

மங்கையர் ...
மற்றவரை கவர்ந்து மயக்கி வலையில் விழச்செய்து ஊசல் படும்படியான குணம் கொண்டதாக வர்ணிக்கப்படுவதால்  இங்கு மங்கையர் என்று குறிப்பது பொதுமங்கையரை (விலைமாதர்) என்று கொள்ளப்படுகிறது. இது காதல் மனைவியை குறிப்பது அல்ல. 

No comments:

Post a Comment